Wednesday, August 18, 2010

Just Relax

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?

கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?



கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு...
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?



கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...


நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்கு மாச எவ்வளவு



சம்பளம் கொடுப்பீங்க?


கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமாதண்ணியடிக்கிறாரு.


கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாகொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?



கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.


மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?


கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்....
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.


1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை



மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு


டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு....!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்



கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...


வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
----------------------------------------------------------------------------------------------------------------------------------
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்....

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

----------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment